Tuesday, October 26, 2010


ஏழு எட்டு மாதங்கள் உருண்டோடிவிட்டது. நீண்ட நெடிய அயர்வான கால கட்டங்கள். புலம் பெயர்ந்து, உயிர் இழந்த வலி உணர்ந்த நாட்கள். உள்ளுர், வெளியூர், வெளி-நாடு என்று நிறைய பயணங்கள். அயர்ச்சியும், அழுகைகளும் போக சொச்சமாய் மகிழ்ச்சி மிச்சம். ஜயகாந்தனின் திரையுலக அனுபவங்கள், சிலமுறை படித்த சுஜாதாவின் கணைழாளியின் கடைசிப்பக்கங்கள், தேவனின் சிறுகதைத்தொகுப்பு என்று சில புத்தகங்கள் மட்டுமே படித்ததாய் ஞாபகம். தயாளு அம்மாளின் தங்கை பேத்தி கடைத்திறப்பு விழா போன்ற நேரத்தை விழுங்கும் வெட்டிச்செய்திகளுக்கு இடையே எனது வேலை சம்பந்தமாய் சில அறிந்தது ஆறுதல். சென்ற இடங்களும், சந்தித்த மனிதர்களும் என்றுமே புதியன. அவை பற்றிய பதிவுகள், எண்ணங்கள் தொடர்ச்சியாய் தொடரும் இனி...

Saturday, November 7, 2009

சென்ற வார விடுமுறை நாட்களில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது வீட்டு டிவி பிண்ணனியில் அதிகமாய் அலறிக்கொண்டிருந்தது. அவருடன் பேச ஆரமித்ததிலிருந்து எனது முதன்மையான கவனம் பிண்ணணியில் (அவரது குரலே பின்ணணி!!!) ஓடிக்கொண்டிருக்கும் அந்த விளம்பர சத்தத்திலேயே நிலைத்திருந்தது. மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் ஒலியை குறைத்துக்கொள் என்று வேண்டுகோள் விடுக்க முடியவில்லை. செல்போன் என்ற சௌகரியமான சாதனத்தால் அவர் என்னை அந்த விளம்பர சத்தத்திலிருந்து விடுபட வைத்து அவர் பேச்சை முதன்மைப்படுத்தினார். விளம்பர ஒலி மெல்ல மெல்ல கறைந்து எனது கவனம் அவர் பேச்சில் செல்லவிருந்த சமயம் காதில் விழுந்த பாட்டால் மீண்டும் நண்பரின் குரல் பின்னுக்குத்தள்ளப்பட்டது.

நல்ல வேளையாய் அந்தப்படத்தைப் பற்றியும், பாட்டப்பற்றியும் பேச்சு திரும்பியதால் மீண்டும் நண்பரின் குரல் முதன்மைப்பட்டது. ஒருவேளை நண்பர் டிவியை விட்டு நகராமல் நின்றிருந்தால் பாட்டில் மனம் லயித்து, அவர் குரல் அரைகுறையாய் கவனிக்கப்பட்டிருக்கும். தப்பினார் அவர்.

அந்த பாடல், உன்னால் முடியும் தம்பியில் வரும் என்ன சமையலோ...என்ற பாடல். பாலசந்தர், கமல், படம் வந்த பழைய காலம் என்று பலதும் சிலாகித்தபின், கல்யாணி, மோகனம், வசந்தா, மத்தியமாவதி என்று ராகமாலிகையாய் வார்த்தை, காட்சி, கதை என்று கவனித்து பார்த்து பின்னி பிணைத்து இசையமைத்த இளையராஜாவை பற்றி என்ன சொல்ல என்றேன் நான். நண்பர் எனக்கு எங்கள் ஆபிஸில் வேலை செய்யும் வசந்தாமணியைத்தான் தெரியும் என்ற ரீதியில், எனக்கு கல்யாணியையும், வசந்தாவையும் சத்தியமாய் தெரியாது என்று வழக்கம் போல் முடித்துக்கொள்ள நானும் வழக்கம்போல ஏண்டா சொன்னோம் என்று நொந்து நூலானேன்.

நன்கு இசையை ரசிக்கும் என் நண்பர்களில் பலர், ஏனோ ரசிப்பை மேம்படுத்திக்கொள்ள ஆழச்செல்ல ஆர்வப்படுவதில்லை. அவர்களுக்காய் இந்தப்பதிவு (அப்பாடா, ஒரு வழியாய் பதிவுக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்)

ராகமாலிகை என்பதை தாண்டி, இப்பாட்டில் "சாதம் ஆக தாமதமா" என்ற வாலியின் வரியைக் கூட ராஜா "சா தா மா கா, தா மா தா மா" என்று கல்யாணியில் ஸ்வர வரிசைப்படுத்தி பிரமாதப்படுத்தி இருப்பார். இப்பாட்டை பல முறை நீங்கள் கேட்டிருந்தாலும், ஸ்ரவம் என்பதால் ஒருவித அசௌகரியமாய், வேண்டாத, புரியாத சமாச்சாரமாய் ஒதுக்கி இருந்தால் அடுத்த முறை கேட்கும் பொழுது கவனியுங்கள். புரிந்து கேட்பதில் எவ்வளவு சுகம் இருக்கிறது என்பதும் புரியும். பாலசந்தர் மாதிரி ஆட்களுக்கு மட்டுமே இந்த மாதிரி தேவையானதை சரியாய் இளையராஜாவிடம் கேட்டுப்பெற தெரிந்திருக்கிறது என்பது அவர் படங்களை பார்த்தால் தெரியும். கற்றாரே கற்றாரே காமுறுவர்?

பாட்டில் உள்ள டெக்னிகல் சமாசரங்களை அறிய முற்படும் காலங்களில், அதை முழுமையாய் ரசிக்க இயலாமல் போவது தவிர்க்க இயலாதது. இதை தவிர்க்க பலமுறை கேட்க முற்படலாம். அறிந்து கொள்ள, கொள்ள நன்றாய் ரசிக்கலாம் என்பதை தவிர, நல்ல இசை, கேட்ட இசை என்ற பாகுபடுத்துதல் எல்லாம் தேவையில்லாதது. Simple definition ஆய் மனதை கிளரும் (நவரசத்தில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்) இசையே நல்ல இசை என்பதாய் என்பதாய் எனது எண்ணம். ரசனையும், இசையும் கால நேரங்களுக்கு உட்பட்டது. என் அப்பா, ரேடியொவில் ரசித்த பல பாடல்களை ரசிக்க விடாமல், ரேடியொவின் கழுத்தை அன்னாட்களில் நெறித்த நான் தற்பொழுது அதில் ரசிக்க பல விஷயங்கள் இருப்பதை உணருகிறேன். என் நண்பர், காதல் தோல்வியில் இருந்த பொழுது உருகி உருகி ரசித்த ரோஜா பட "காதல் ரோஜாவே" பாட்டை அவரால் Ipod சகிதம் பிசினஸிற்காய் ஊரூராய் சுற்றும் பொழுது ரசிக்க இயலவில்லை. கேட்டால் அது எல்லாம் ஒரு காலம்டா என்பார்.

ராகம், ஸ்வரம், ஸ்ருதி போன்ற இசையின் அடிப்படை வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் தெரியாமல் அபாரமாய் எல்லா இசையும் ரசிக்கும் என் நண்பர்களை குழப்புவதற்காய் என்னால் ஆன முயற்சி கீழே.

ஸ்ருதி - ஆதார சப்தம். இதன் அடிப்படையாய் பிற சப்தங்கள் ஒரு வறைமுறைக்குட்பட்டு எழுப்பப்பட அது இசையாகிறது. Commonly refers musical pitch. determined by auditory perception
ஸ்வரம் - ஒரு இசையின், சப்ததின் ஒரு சிறிய பகுதி. Type of musical sound for a single நோட்
ராகம் - ஒரு சட்டத்திற்கு உட்பட்ட, ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட சத்தம்.
தாளம் - குறிப்பிட்ட கால இடைவேளையில் ஓரே சீராய் தட்டி எழுப்பப்படும் ஓசை என்பதாய் கொள்ளலாம்
ராகமாலிகை - பல ராகங்களின் சேர்க்கை
பல்லவி - பாடலின் முதன்மையான வரிகள்
அனுபல்லவி - பல்லவிக்கு அடுத்து வருவது
சரணம் - பாடலின் கருத்துப்பகுதி

இசையை புரிந்து ரசிக்க முயற்ச்சிகிறேன் என்பதை தாண்டி "சாமி சத்தியமாய்" எனக்கு எதுவும் தெரியாதுங்கோ...நல்லா தெரிஞ்சவங்க ஏதாவது எதாவது குத்தம் குறை இருந்தா சரியாய் சொல்லிக்கொடுத்து, மனிச்சு விட்டுடுங்கோ சாமியோவ்.....

Wednesday, October 21, 2009

கடந்த ஒரு மாதத்திற்கு மேலான காலத்தை அலுவலக வேலை பளுவும், குடும்ப சுமையும் சுவீகரித்துக்கொண்டு விட்டதால், மெயில் பார்ப்பது என்பதை தாண்டி எதையும் செய்ய தோன்றவில்லை. கொலம்பஸ் நாள் சேர்த்த தொடர் விடுமுறை நாட்களில், ஆயாசமாய் உட்கார்ந்து படிக்க நினைத்த விஷயங்களை படிக்கவும் நெட்டில் மேயவும் முடிந்தது. வலை தளங்களில் கடந்த நாட்களில் அதிகம் அடிபட்டது நோபல் பரிசு வெங்கடராமனனும், அமைதியான ஒபாமாவும்தான்.

வேதியியல் பற்றிய ஒரு அறிவும் நமக்கு இல்லை என்பதாலும், அதில் அறிவு அதிகம் உள்ளவர்கள் அதிகம் விமர்ச்சிக்காததாலும் அவர் பரிசுக்கு தகுதி உள்ளவராகவே அறியப்படுகிறார். ஒன்பது மாதங்கள் அமைதியாய் இருந்ததற்க்காய் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. நோபல் பரிசு குழுத்தலைவர் ஒபாமாவின் அமைதிக்கான முயற்சியை ஊக்கப்படுத்தத்தான் இந்தப்பரிசு என்றிருக்கிறார். நோபலின் உயில் படி ஒரு துறையில் முன்னோடியாய் செயல் பட்டவர்களுக்கே பரிசு தரமுடியும் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

காந்திக்கு பரிசு இல்லை ஒதுக்கியவர்கள் ஒபாமாவிற்கு பரிசு கொடுத்து கிட்டத்தட்ட நோபல் பரிசை நம்மூர் கலைமாமணி விருது ரேஞ்சுக்கு கொண்டுவந்து விட்டார்கள். இதை எழுதும் பொழுது அனாவசியமாய் நடிகர் விவேக் பத்மஸ்ரீ வாங்கியது வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. வீதிக்கு வந்தபின் விமர்ச்சனத்திற்க்கு தப்பமுடியாது என்று ஜெயகாந்தன் சொல்லியது போல், ஒபாமா தவிர அல்கொய்தாவில் உள்ள குப்பனுக்கோ, சுப்பனுக்கோ அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்திருந்தாலும் கூட இவ்வளவு விமர்ச்சனம் எழுந்திருக்காது.

விருப்பு, வேறுப்பு, அரசியல் எங்குதான் இல்லை. எல்லா பீயும் நாறும் என்பதே நிதர்சனம்

தமிழ்ப்படுத்தாத ஆல்பிரட் நோபலின் உயில் கீழே
" The whole of my remaining realizable estate shall be dealt with in the following way:

The capital shall be invested by my executors in safe securities and shall constitute a fund, the interest on which shall be annually distributed in the form of prizes to those who, during the preceding year, shall have conferred the greatest benefit on mankind. The said interest shall be divided into five equal parts, which shall be apportioned as follows:

one part to the person who shall have made the most important discovery or invention within the field of physics; one part to the person who shall have made the most important chemical discovery or improvement; one part to the person who shall have made the most important discovery within the domain of physiology or medicine; one part to the person who shall have produced in the field of literature the most outstanding work of an idealistic tendency; and one part to the person who shall have done the most or the best work for fraternity among nations, for the abolition or reduction of standing armies and for the holding and promotion of peace congresses.

The prizes for physics and chemistry shall be awarded by the Swedish Academy of Sciences; that for physiological or medical works by Karolinska Institutet in Stockholm; that for literature by the Academy in Stockholm; and that for champions of peace by a committee of five persons to be elected by the Norwegian Storting. It is my expressed wish that in awarding the prizes no consideration whatever shall be given to the nationality of the candidates, so that the most worthy shall receive the prize, whether he be Scandinavian or not. " —Alfred Nobel, Alfred Nobel's Will.

Friday, October 16, 2009

வேலை, ப்ரொஜெக்ட் பயம் ஒதுக்கி, எதிர்கால கவலை, சிந்தனை தொலைத்து, அம்மா அப்பாக்களின் சுமை புரியாமல் புத்தாடையுடன் வாயில் நீர் ஓழுக வீடுதோறும் வாங்கிய இனிப்பை சுவைத்துத்திரிந்த 'கவலை' வார்த்தை தெரியா காலத்தை, வெடிக்கா வெடியை உறித்தாவது கொளுத்தி மகிழ்ந்த முனைப்பு என்ற பயமறியா பருவ மன நிலையை தீபாவளி நாளிலிருந்து வரும் எல்லா நாள்களிலும் கொடு இறைவா...என்னாளும் தீபாவளி ஆக வாழ்த்துக்கள்

Saturday, September 5, 2009

சில மாதங்களுக்கு முன் Nicolas Tesla வின் வாழ்க்கையை பற்றி படிக்க நேர்ந்தது. அந்த மனிதரின் புத்தியும், செயல்களும் பிரமிக்கதக்கவை. மிக பிரபலமான மனிதராய் அறியப்பட்டாலும், ஏன் பரவலாய் பாமர ஜனங்கள்வரை அறியப்படா மனிதரானாய்? என்ற கேள்வி எழுந்ததால் அதிகம் அறிந்தும் அறியப்படா மனிதர்களை பற்றி நான் அறிந்தவற்றை எழுத விழைகிறேன்.

இதில் வருபவர்கள் காலம் கடந்தவர்களாகவும், சம காலத்தில் ஏதோ ஒரு வகையில் என்னை யோசிக்க வைத்த மனிதர்களாகவும் இருக்கலாம். நல்லவைகளாகவும், அல்லாதவைகளாகவும் இருக்கலாம். எண்ணமே எழுத்து. நல்லவைகளாய் தோன்றுபவை அல்லாதவைகளாகவும், அல்லாதவைகளாய் தோன்றுபவை நல்லவைகளாகவும், கிடைத்த கிடைக்கப்பெறும் அனுபவங்களால் அன்றாடம் மாறிக்கொண்டிருக்கும் முடிவில்லா நிகழ்வுகள்.

இன்டர்நெட் யுகத்தில் எதை வேண்டுமாலும் படிக்கலாம், என்ன வேண்டுமாலும் என்றாகி விட்ட நிலையில் கூடிய மட்டும் மனோதர்ம விரோதமில்லாமல், நாம் எழுதுவதை யார் படிப்பார்கள் என்ற பிரக்ஞை இல்லாமல் படித்தவற்றை பகிர்தல் நலம் என்பதாய் எனது எண்ணம்.

நிகொலோ டெஸ்லா - தோற்றம்-மறைவு 10 ஜீலை 1856 முதல் 7 ஜனவரி 1943 வரை. ஏறத்தாழ 86 ஆண்டுகளான நீண்ட வாழ்க்கை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது மாதிரியான, ஆராய்ச்சிகளுக்கான அர்ப்பணிப்பு வாழ்க்கை. ஆஸ்ட்ரியா குடிமகனாய் பிறந்து, ஹங்கெரி, ப்ரான்ஸ் என்று வாழ்ந்து அமெரிக்க குடிமகனாய் வாழ்க்கையை முடித்தவர். மார்கோனிக்கு முன்பே wireless communication என்பதை நிருபித்து காட்டியவர். உலகின் மிக முக்கியமான AC polyphase transmission and AC motor என்பதை 1888 லேயே கண்டறிந்தவர். பணத்தின் மீது பற்றற்றவராய் இருந்ததாலும், பல துறைகளில் நாட்டமுடயவராய் இருந்ததாலும் பலரால் பைத்தியகாரப்பட்டம் சூட்டப்பட்டு அங்கீகரிக்கப்படாத ஆராய்ச்சியாளராய் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்.

பணத்தேவைக்காய் எடிசனிடம் (தாமஸ் ஆல்வா எடிசன்) வேலை செய்த கால கட்டத்தில் இவருடைய பல வேலைகள் எடிசனால் உறிஞ்சப்பட்டு அவைகள் எடிசனுடைய கண்டுபிடிப்பகள் ஆக்கப்பட்டன. ஆனாலும் AC motor என்பது தப்பி பிழைத்து, இவர் பெயரிலேயே காப்புரிமை பெற்றது.

மறைந்தபின் அவருடைய கண்டுபிடிப்புகளின் அருமைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நினைத்த அமெரிக்க அரசாங்கம் ரகசியமாய் அவருடைய பல வருட உழைப்பை வாரிச் சுருட்டிக் கொண்டுவிட்டது. மின் காந்த கதிர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் பொருள்களையும் பேரழிவுக்கு உட்படுத்த முடியும் என்பதான இவருடைய கண்டுபிடிப்புக்களும், UFO (Unidentified fying objects) என்பதான இவருடைய சித்தாங்களையும் இன்றும் FBI பரம ரகசியமாய் பாதுகாத்து வருகிறது.

இந்துமத இயற்பியல் சித்தாந்தங்களாலும், சுவாமி விவேகானந்தரின் விளக்க உரைகளினாலும் கவரப்பட்டு சைவ உணவு முதல் பல வகைகளிலும் தன் பழக்க வழக்கங்களை தன்னுடைய இறுதிக்காலங்களில் மாற்றிக்கொண்டவர்.

மறக்கப்பட்ட, மறைக்கப்பட்டமாமேதை என்பதாய் இன்றும் ஆராய்ச்சியாளர்களாலும், இயற்பியல் மேதைகளாலும் நினைவு படுத்தப்படுபவர். பலராலும் அறியப்பட, கவரப்பட புத்திசாலித்தனமும், நல்ல குணங்களும், சாதனைகளும் மட்டும் போதுமானவை அல்ல, சுய விளம்பரமும் , அதற்க்கு அப்பாற்ப்பட்ட ஏதோ ஓன்றும் தேவை என்பதை உணர்த்தும் வாழ்க்கை வாழ்ந்தவர்.

மேற்சொன்னவற்றை படித்தபின் Nicolas Tesla என்று நீங்கள் Google ல், Bing ல் நீங்கள் தேடினீர்கள் என்றால் நான் எழுதியதும் உங்களை யோசிக்க வைத்திருக்கிறது என்பதாய் அர்த்தம்...ஹா!..ஹா!..ஹா!

Saturday, August 15, 2009

சென்ற பதிவின் தொடர்ச்சியாய் இது. மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிகழ்ச்சியின் உரிமையின் ஏல போட்டியில் Sony 60 மில்லியன் டாலர் கொடுத்து வென்றுவிட்டது. Oct 30ல் உலகெங்கும் திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். நிறைய பேட்டிகளுடன் நிகழ்ச்சியின் பெரும் பகுதியை 3D ல் வேறு திரையிட Sony திட்டமிட்டு இருக்கிறது.

கடைசி தகவல்படி அவரது உடல் மெய்யாகவே புதைக்கப்பட்டுவிட்டதாம். புதைக்கப்படுவதற்க்கு முன், அவரது மூளையைகழட்டி எடுத்து பரிசோதித்து மீண்டும் உடலில் பொருத்தினார்களாம்...அதை பற்றியெல்லாம் நமக்கு என்ன சார் தெரியும்? மூளை சமாசாரமாச்சே!!!

Saturday, July 25, 2009

செத்தும் கொடுத்தான் சீதக்காதி. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு சரியாய் பொருந்தும். இறப்பதற்கு முன் இவர் செய்த ஒத்திகை நிகழ்சியின் வீடியோவை சோனி கம்பெனி 50 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்து ஏலம் விட்டிருக்கிறது. Paramount, Universal, 20thCentury, Warner Bros என்று பல பெரிய தலைகள் வியாபார அடிதடியில் இறங்கியிருக்கின்றன. பேரம் படிந்தபின் பெரிய திரைகளில் மக்கள் பார்த்து 'ஜென்ம சாபல்யம்' அடையலாம். இதை தவிர இவர் இறந்ததனால் ஏற்பட்ட CD, படங்கள் விற்பனை, ராயல்டி தொகைகள் போன்றவை இவரை கடனை அடைத்தாலும் கையில் நிறைய காசுடன் இருக்கும் (இருந்த) கோடீஸ்வரனாக்கி இருக்கிறது.

இறந்தபின் ஏறத்தாழ ஒரு மாத காலம் பிணத்தை வைத்துக் கொண்டு இவர்கள் அடித்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இருக்கும், கிடைக்கும் சொத்திற்கான அடிதடி ஒரு புறம் தொடர, இறந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே amezon.com லிருந்து அமெரிக்காவின் சந்து பொந்து கடை வரை எல்லாவற்றையும் ஜாக்சன் மயமாக்கி காசு பார்த்துவிட்டார்கள். பனியன், ஜட்டி, துண்டிலிருந்து குழந்தைகள் விளையாடும் பந்து வரை எல்லாம் ஒரே ஜாக்சன் மயம்தான். டிவிக்களையும், பத்திரிக்கைகளையும் பற்றிஎதுவும் சொல்லுவதிற்க்கு இல்லை. நம்மூர் ஆனந்தவிகடனிலிருந்து அமிஞ்க்கரை போஸ்ட் வரை ஜாக்சன் பற்றிய பல செய்திகளை போட்டு அவரை மகாத்மா ரேஞ்சிற்க்கு உயர்த்தியபின் இவர்கள் என்ன விட்டு விடுவார்களா?

Professionalism என்ற வார்த்தையை சொல்லி எதையும் நேர்த்தியாய் வியாபாரமாக்குவதில் அமெரிக்கர்கள் எப்பொழுதும் 'கை' தேர்ந்தவர்கள். இன்று தகனம், அன்று அடக்கம் என்று புலி வருது, புலி வருது கதையாய் இழுத்து கடைசியில் டிக்கெட் போட்டு ஒரு showவுக்கு ஏற்பாடு பண்ணி ஒரு வழியாய் வியாபாரத்தை முடித்தார்கள் என்று பார்த்தால், Jackson rehearsal footage என்று அடுத்த வியாபாரத்தை ஜம்மென்று தொடங்கிவிட்டார்கள். "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்" என்பதன் பொருளை நன்றாய் அறிந்தவர்கள்.


நியூயார்க் Times square ல் பெரிய திரையில் சவ அடக்க நிகழ்ச்சியை காண தெருவில் இடம் பிடிக்க மடக்கு நாற்காலிகளுடனும், கையில் துண்டுடனும், வெயில் காலம் வேறு ஆரமித்து விட்டதால் பாலின வித்தியாசமின்றி ஜட்டி, பனியனுடன் அலைந்த கூட்டத்தை பார்த்த பொழுது நிஜமாகவே இவர்கள் எல்லோரும் ஜாக்சன் இசையில் மயங்கியவர்கள்தானா? என்ற கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

தொக்கி நிற்க்கும் இந்த சில கேள்விகள் இன்னும் சில நாட்கள் பத்திரிக்கைகளின் பக்கத்தையும், பையையும் நிரப்ப உதவும். எப்படி இறந்தார்? ஜாக்சன் வைத்திருந்த குழந்தைகளின் தந்தை யார்? (ஜாக்சனின் குழந்தைகளுக்கு தந்தை யார் என்பது அபத்தமான கேள்வி) ஜாக்சனின் உடல் உண்மையாகவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா?

நமக்கு அவரது இசையை முழுமையாய் கேட்க்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லையாதலால் இப்போதைக்கு அவரது இசை பற்றிய மேதாவிலாசங்களை சொல்லாமல் விட்டுவிடுவோம். இறந்த மனிதனின் வாழ்க்கையை பற்றி விமர்சிப்பது நாகரீக குறைபாடதலால் அதுவும் எழுதாமல் விடப்படுகிறது இங்கு.


Thursday, June 11, 2009

Apparently, I am noticing the impacts of recession compare to last year in New York city. People are thinking not twice, many times before they spending. Increasing train, bus fares, lot of service lines cut due to cost cutting of transport corporations. Straphangers get more yuck for their buck. As surveyed, reported that most of the people start avoids going hotels and bars.

The economy may have given New Yorkers more reason to drink, but many are imbibing less often at bars and lounges, according to a new Zagat nightlife survey published in amNY recently. (www.zagat.com/about/) amNY and Metro are the free daily’s available in NYC and covering more local news. More than half of the 6,000 New Yorkers surveyed say they go out less often because of the still-sinking economy.

Read few below statements taken from Newyorkers and published in amNY couple of days back.

“I'm drinking more at home and save more money”
“I do think there are more house parties at least before going out to the bars,”
“People are doing a lot more pre-gaming at cheaper places before going to the main event at a more expensive place.”

Even those who still have cash to blow are thriftier when they party by going to less expensive nightspots, paying more attention to drink prices and ordering fewer drinks, according to Zagat, which released its latest nightlife guide today. People still go out often, but not in the pricey nightclubs they used to frequent.

New York nightspots are also trying to adapt to drinkers' changing habits by offering more free or cheap snacks and open bars. The strategy may be working: the Zagat survey noted the number of new nightspots opening up versus those that have closed remained on par with the last survey's tally.
Apart from bottles and beers, Unemployment rates climbed in all U.S. metropolitan areas from last May to this May, the government announced on last week.

Of metro areas with a population of more than a million, Detroit wins the sad prize of highest unemployment, with a rate of 14.9 percent. The Labor Department's Bureau of Labor Statistics reported that El Centro, Calif. had the highest overall rate: 26.8 percent. Fifteen areas reported jobless rates of at least 15 percent: Seven in California, three in Michigan, and two in Indiana.

Oklahoma City and San Antonio, Texas, were the largest metro areas with the lowest rates, with 5.7 and 5.8 percent unemployment, respectively. The lowest rate of all cities was in Bismarck, N.D., at 3.5 percent, with Iowa City right behind at 3.7 and Ames, Iowa at 3.8 percent. Overall, 148 metro areas reported unemployment above the national rate of 9.1 percent, and 215 areas reported lower rates.

All started in US, to understand the reason we need to go back housing sector of America for past many years. In US, a boom in the housing sector was driving the economy to a new level. A combination of low interest rates and large inflows of foreign funds helped to create easy credit conditions where it became quite easy for people to take home loans. As more and more people took home loans, the demands for property increased and fueled the home prices further. As there was enough money to lend to potential borrowers, the loan agencies started to widen their loan disbursement reach and relaxed the loan conditions.

The loan agents were asked to find more potential home buyers in lieu of huge bonus and incentives. Since it was a good time and property prices were soaring, the only aim of most lending institutions and mortgage firms was to give loans to as many potential customers as possible. Since almost everybody was driving by the greed factor during that housing boom period, the common sense practice of checking the customer’s repaying capacity was also ignored in many cases. As a result, many people with low income & bad credit history or those who come under the NINJA (No Income, No Job, No Assets) category were given housing loans in disregard to all principles of financial prudence. These types of loans were known as sub-prime loans as those were are not part of prime loan market (as the repaying capacity of the borrowers was doubtful).

Since the demands for homes were at an all time high, many homeowners used the increased property value to refinance their homes with lower interest rates and take out second mortgages against the added value (of home) to use the funds for consumer spending. The lending companies also lured the borrowers with attractive loan conditions where for an initial period the interest rates were low (known as adjustable rate mortgage (ARM). However, despite knowing that the interest rates would increase after an initial period, many sub-prime borrowers opted for them in the hope that as a result of soaring housing prices they would be able to quickly refinance at more favorable terms.

“No boom lasts forever”, the housing bubble was to burst eventually. In the US, an estimated 8.8 million homeowners - nearly 10.8% of total homeowners - had zero or negative equity as of March 2008, meaning their homes are worth less than their mortgage. This provided an incentive to “walk away” from the home than to pay the mortgage. The chain of reactions happened automatically in bank and invested shares / stocks.

What is Today? When you read again the first paragraph, you can understand the present situation in US. People accustomed the difficult economic conditions and start trying to find their own way to save money somehow. Experts expressing their predictions with their tech jargons (GDP, GDI, Income inequality metrics etc) that the economy will start stable late 2009 to mid of 2010. So Pray for the best, prepare for the worst

Saturday, May 23, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஒரு வழியாய், முடிவுக்கு வந்துவிட்டது என்று பார்த்தால், இழுக்க இழுக்க இன்பம் என்று நினைத்து விட்டார்கள். ப்ரி-பைனல், போஸ்ட்-பைனல் என்று 2009 முடிவுக்கு வந்து விடும் போலிருக்கிறது. sponsers நிறைய கிடைக்க பாட்டை விட பைத்தியகாரத்தனங்கள் அதிகரித்துவிட்டது.

சென்னையிலிருந்து வரும் பொழுது, Brussels Airport ல் கர்நாடக இசை பாடகர் T M கிருஷ்ணாவுடன் சில நிமிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. என் பக்கத்தில் அவர் நின்றிந்தாலும், என்னால் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. கச்சேரியில் இருப்பதற்கு நேர் மாறாய், ஜீன்ஸ், கோட், Laptop சகிதம், படு Casual ஆய் Advertising Model போல் ஜம் என்று இருந்தார். நல்ல திறமைசாலி. குறிப்பாய் ராக ஆலாபனைகளில் அவரது திறமையை பல கச்சேரிகளில் கேட்டிருக்கிறேன். திறமையை விட புத்திசாலிதனமும், Self Marketing Skills தான் ஒருவனை முன்னே கொண்டு செல்லுகிறது. நம்மை நாம் எவ்வாறு Marketing பண்ணிக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம். நாம் நம்மை பற்றி நன்றாய் சொல்ல, பின் நம்மை, இவன் நல்லவன், வல்லவன் என்று பிறர் தொடருவார்கள். இதில் இளைய தலைமுறை கர்நாடக இசை கலைஞர்கள் பெரும்பாலோர் சமர்த்தர்கள். நடை, உடை பாவனையில் இருந்து வேண்டிய பொழுது Top to Bottom எல்லா வகையிலும் சுய விளம்பரம் சார்ந்து, காரியங்களை தங்களை மையப்படுத்திக்கொள்வதில் முடித்துக் கொள்ள அவர்களால் சுலபமாய் முடிகிறது.

ஏர்டெல்கு வருவோம். அதில் பாடும் பிரசன்னாவிற்க்கு, அவரது பாடும் திறமை போல் பல மடங்கு தன்னை விளம்பரபடுத்திக் கொள்ளும் திறமை இருக்கிறது. சரக்கு கம்மி என்னும் விஷயம் கிடைக்கும் விளம்பரத்தில் அடிபட்டு போகும். அமைதியாய், அடக்கமாய் கஷ்டமான பாட்டை எடுத்து, நெளிவு, சுளிவான சங்கதிகளை பிரமாதமாய் போட்டு, அபாரமாய் பாடும் ரவியின் திறமையை நாலு பேர் மட்டுமே அறிவர்.

இரண்டு விஷயங்களை எழுத நினைத்து எழுதுகிறேன். முதலாவது, நண்பர்கள் சிலர் அமர்த்தா TV Links (Provided few links below) சிலவற்றை அனுப்பி பட்டையை கிளப்பும் பொடுசுகள் முன்னால் AirTel Super Singer ல் பாடுபவர்கள் எம்மாத்திரம் என்றிருந்தார்கள். இரண்டாவது, நெட்டில் பார்த்த, படித்த பலதிலும், பலர் AirTel Super Singer இல் பங்கு பெறும் பலர் பேசும் பிராமண பேச்சை கீழ்தரமாய் சாடியிருப்பது. தங்கள் பிழைப்பிற்க்காய் திராவிக கட்சிகள் செய்த பல வேலைகளில் பல நல்ல விஷயங்கள் ஏறி மிதிக்கப்பட்டு அவை ஒரு குறிப்பிட்ட கும்பல் சார்ந்த ஆளுமைக்கு உட்பட்டுவிட்டது. கேரளாவில், இசை என்பது பொதுச்சொத்து.

நம் வீட்டில் திறமையை வளர்த்த வழியில்லை. எல்லா அடுத்தவர்களையும், ஆஹா, ஓஹோ என்று கூப்பிட்டு வளர்த்துவீர்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று மேடைதோறும் மார் தட்டுவீர்கள். அவர்கள் திறமையால் அவர்கள் வளர்ந்தபின், ரஜினி கன்னடம், SPB தெலுங்கன், ஜேசுதாஸ் கேரளாக்காரன் என்று கண் முன்னே நிற்கும் இளையராஜாவை விட்டு விட்டு புறம் சொல்லி தூற்றுவீர்கள். ஸட்ஜம், பஞ்சமம் இல்லாமல் ஏதையா சங்கீதம்? வடமொழி பெயர்கள் பிடிக்கவில்லை என்றால், குரல் (ச), துத்தம் (ரி), கைக்கிளை (க), உழை (ம), இளி (ப), விரளி (த), தாரம் (நி) என்று தமிழில் பெயர் சொல்லி இசை வளருங்கள். பிறகு பாருங்கள், உங்கள் வீட்டு குயில்களும் எப்படி பாடும் என்பதை.

Few suprising sampls are below...Watch this videos... more posted in YouTube
http://www.youtube.com/watch?v=VES73uNzWJE&feature=PlayList&p=92DFD3CD746EDAB7&playnext=1&playnext_from=PL&index=6
http://www.youtube.com/watch?v=V0YXE1BAXDo&feature=channel
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&feature=channel
http://www.youtube.com/watch?v=lQdk0CK9vW4&feature=channel
http://www.youtube.com/watch?v=4MKvY0Q8NaE
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&NR=1
http://www.youtube.com/watch?v=iX0U9PFRJ8Y&feature=related
http://www.youtube.com/watch?v=VES73uNzWJE&feature=PlayList&p=92DFD3CD746EDAB7&playnext=1&playnext_from=PL&index=6
http://www.youtube.com/watch?v=V0YXE1BAXDo&feature=channel
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&feature=channel
http://www.youtube.com/watch?v=lQdk0CK9vW4&feature=channel
http://www.youtube.com/watch?v=4MKvY0Q8NaE
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&NR=1
http://www.youtube.com/watch?v=iX0U9PFRJ8Y&feature=related

Sunday, April 19, 2009

தாய் மண்ணே வணக்கம் என்று வணக்கம் போடாதது ஒன்றுதான் குறை. சென்னை வெயிலிருந்து தப்பி வந்து முன்று வாரம் ஓடியேவிட்டது. இன்றும் வெயில் வராதா என்று ஆயாசமும், தவிப்பும் வந்த ஒரிரு நாட்களிலேயே வந்துவிட்டது இங்கு. எதுதான் வேண்டும்? எதில்தான் திருப்தி அடையும் மனம்?

ஆச்சரியமாய் இருக்கிறது. ஊருக்கு போகப்போகிறோம் என்ற மன மகிழ்ச்சியும், குறுக்குறுப்பும், தவிப்பும் வரவே இல்லை எனக்கு. நண்பர்கள், உறவுகள் ஒட்டுதல்கள் மெலிதாகிப்போனது காரணமாய் இருக்கலாம். நேரமின்மையும் ஒரு காரணமாய் இருக்கலாம். கிடைத்த எட்டு நாட்களில் பயணமே இரண்டு நாட்களை விழுங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன் Ballistic missile defence system என்பது பற்றி படிக்க நேர்ந்தது. விடுக்கப்பட்ட எவுகணை, தோட்டாவை அதைக்காட்டிலும் வேகமாய் சென்று அழிக்கும் முறை. அந்த மாதிரி பயணிகள் வேகமாய் செல்ல ஏதேனும் சௌகரியங்கள் வரும் காலத்தில் வரலாம்.

முன்பெல்லாம் சென்னையிலிருந்து கோவை செல்ல டிக்கெட் வாங்கிவிட்டு, நாள் நெருங்க நெருங்க தவிப்பாய் தவிப்பேன். டிக்கெட் இல்லாமல் unreserved ல் வியர்த்து ஒழுகி, அடிதடி போட்டு, தூக்கம் தொலைத்து, அழுக்காக வீடு போய் சேர, எப்போதடா வார இறுதி நாள் வரும் என்று நாயாய் காத்துக்கிடப்பேன். கிளம்பும் முன், பார்ப்பவர் எல்லோரிடமும், ஊருக்கு போகிறேன் ஊருக்கு போகிறேன் என்று சொல்லுவேன். கோயமுத்தூர் போறத்துக்கு ஏதோ அமெரிக்கா போறாமாதிரி சொல்லிட்டு திரியரான் என்று நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். களிப்பாய் களித்த கடந்த நாட்கள் எல்லாம் கோவையில்தான் என்பதான ஊர் பாசம். உண்மை என்னவென்றால், மனித மனம் எப்பொழுதும் கடந்த காலத்தை, நிகழ் காலத்தை விட இனிமையானதாகவே நினைக்கிறது. அப்பொழுதும், அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல் பட்டுக்கொண்டிருந்தோம் என்பதுதான் உண்மை.


ஒன்று மட்டும் நிதர்சனம். தெருத்தெருவாய் சுற்றித்திரிந்து, பட்டமும், பம்பரமும், கிடைத்த சந்தில் கிரிக்கெட்டுமாய் நான் (நாம்?) கழித்த காலங்கள் கண்டிப்பாய் என் மகனுக்கு, கிடைக்காது. உலகை வெளியே தேடிய காலம் போய், அறைக்குள் உலகை அழைக்கும் காலத்தில் அவர்கள் இருக்கிறார்கள். உறவுகள் சூழ்ந்த வாழ்க்கை என்பது ஓடியே போய் உறவுகள். புருஷன், பெண்டாட்டி, பிள்ளையாய் சுருங்கிவிட்டது. இது பாட்டிடா, இது தாத்தாடா, என்று அறிமுகப்படுத்துவதை என்னவென்று சொல்ல? Hi...hi...bye..bye உறவுகள். கண்ணாயில் விழுந்த கீறலாய் நீ சௌக்கியமா? நான் சௌக்கியம் என்பதாய் முடிந்து விட்டது. பல சமயங்களில் நான் சௌக்கியம் என்பதை கூட முழுமையாய் வெளிப்படுத்த முடிவதில்லை. 

அசட்டு ஆங்கில வார்த்தைகள், computer game,  You tube ல் படங்கள் என்று விளையாடும் என் இரண்டரை வயது மகனின் செய்கைகளை பார்த்து பெருமைப்பட என்ன இருக்கிறது? அவன் இழந்த நம் காலங்களை நினைத்து மனச்சுமையுடன் இந்த தகப்பனால். பின்னாளில் நிச்சயமாய் அவனால் ஈன்ற பொழுதினினும் பெரிதுவக்கலாம். சுற்றி விளையாடிய காலம் போய் நாலு சுவற்றுக்குள் விளையாடும் காலம். காலம்...காலம்...காலம்தான் கடவுள்