Showing posts with label Religion / God. Show all posts
Showing posts with label Religion / God. Show all posts

Saturday, May 4, 2013

ஒரிரு மாதங்களுக்கு முன் துக்ளக்கில் வேளங்குடி கிருஷ்ணனின் ஸ்ரீமத் பாகவதம் படிக்க நேர்ந்தது. பாகவதத்தில் சொல்லியுள்ள காலக்கணக்குகளை விளக்கியிருந்தார். படிக்க படிக்க வியப்பாய் இருந்தது. நமக்கு விளங்காத அல்லது விருப்பமில்லாத விஷயங்களை பெரியார், பகுத்தறிவு ஏதாவது ஒரு அடைப்புக்குறிக்குள் அடைத்து அமுக்கி விடுவதே நமது வாடிக்கை. இதில் கொடிமையிலும் கொடுமை அபத்தமான, துளியும் உண்மையும், logicம் இல்லாத விஷயங்கள் Internet லும், News paper, Magazines ல் வந்தாலோ, அல்லது நம்மூர் அறிவு ஜீவிகள் யாராவது பேசி விட்டாலோ கண்முடித்தனமாக நம்புவது. குறிப்பாய் ஆங்கிலத்தில் அயல் நாட்டான் சொல்லிவிட்டால் அந்த கருத்திற்கு எதிராய் பேசுபவன், யோசிப்பவன் ஒரு முழு மூடன்.

நானும் கண்முடித்தனமான நம்பிக்கை எந்த விஷயத்திலும் கொண்டவனில்லை. முடிந்தவரை புரியாத விஷயங்களை மட்டம் தட்டாமல், புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன். சரியான விளக்கம் ஒருவரிடம் கிடைக்கவில்லை என்றால் சரி இவரும் நம்ம கேஸ் தான் என்று நகர முயல்வேன். ஊர் பெயர்கள் போன்று வார்த்தைகளும், கருத்துக்களும் திரிந்துதான் தலைமுறை கடக்கிறது. ஆற்றில் ஓடும் குழாங்கல்லாய் சொல்லும், மொழியும், கருத்தும் புதிது புதிதாய் ஒவ்வொரு நொடியும் ஜனித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மையை உணர தலைபடும் பொழுது, காலம்தான் கடவுள், இந்த பிரபஞ்சத்தில் நான் யார் என்பதான தத்துவ விசாரணையே மிச்சமாகிறது.

Second, Hour என்பதை தாண்டி எதுவும் தற்காலத்தில் இருப்பதாய் தெரியவில்லை. Second யை வேண்டுமானல் millisecond, microsecond என்று பிரிக்கலாம். அப்படியே இவ்வளவு விரிவான காலக்கணக்கு இருந்தாலும், அது ஏற்படுத்தப்பட்ட காலமும், நம்முடைய காலக்கணக்குக்கும் இடையே ஆன காலக்கணக்கை என்னவென்பது? நல்ல விஷயம் என்பதாய் நினைப்பதை உடனே பகிர்தல் நலமாதலால் வேளங்குடி கிருஷ்ணனின் எழுத்துக்கள் அப்படியே கீழே...

சில வருடங்களுக்கு முன் படித்த யுகக் கணக்கின் postம் உங்கள் பார்வைக்கு...

http://www.harish-sai.blogspot.in/search/label/Religion%20%2F%20God

"......

2 பரமாணுக்கள் = ஒரு அணு
3 அணுக்கள் = ஒரு த்ரிஷரேணு
3 த்ரிஷரேணு = ஒரு த்ருடி
100 த்ருடிகள் = ஒரு வேதம்
3 வேதங்கள் = ஒரு லவம்
3 லவம் = ஒரு நிமிஷம்
4 நிமிஷம் = ஒரு க்ஷணம்
5 க்ஷணங்கள் = ஒரு காஷ்டா
15 காஷ்டா = ஒரு லகு
15 லகு = ஒரு நாழிகை
2 நாழிகை = ஒரு முக்ஷீர்த்தம்
30 முக்ஷீர்த்தம் = ஒரு நாள்
60 நாழிகை = ஒரு நாள்
இரண்டரை நாழிகை = ஒரு மணி
24 நிமிஷம் = ஒரு நாழிகை
48 நிமிஷம் = ஒரு முக்ஷீர்த்தம்
60 நிமிஷம் = ஒரு மணி
24 மணி = ஒரு நாள்

நம்முடைய ஒரு நாள் 24 மணி நேரங்கள் கொண்டது. அதில் 60 நிமிஷங்கள் ஒரு மணி நேரம். புராணத்தின்படி ஒரு 48 நிமிஷம், ஒரு முக்ஷீர்த்தமாய் சொல்லப்படுகிறது. அதே 24 நிமிஷங்கள் ஒரு நாழிகை. ஒரு நாளில் 60 நாழிகை இருக்கும். ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகைகள். முப்பது முக்ஷீர்த்தம் ஒரு நாள். இரண்டு நாழிகை ஒரு முஷீர்த்தம். 15 லகு ஒரு நாழிகை. 15 காஷ்டா ஒரு லகு. 5 க்ஷணங்கள் ஒரு காஷ்டா. நான்கு நிமிஷங்கள் ஒரு க்ஷணம். மூன்று லவம் ஒரு நிமிஷம். (இந்த நிமிஷம் நாம் ஆங்கிலத்தில் கூறும் மினிட் அல்ல) மூன்று வேதங்கள் ஒரு லவம். 100 த்ருடிகள் ஒரு வேதம். மூன்று த்ரிஷரேணுகள் ஒரு த்ருடி. மூன்று அணுக்கள் ஒரு த்ரிஷரெணு. 2 பரமாணுக்கள் ஒரு அணு. காலத்தின் மிகச்சிறிய அளவே பரமாணு என்று சொல்லப்படுகிறது.

ஒரு கணக்கிற்காக கூறுகிறேன். ஒரு நாழிகை 24 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன். மேற் சொன்ன அட்டவணையின்படி வகுத்துக் கொண்டே போனால், ஒரு பரமாணு = 0.000000333 நிமிடங்கள் (மினிட்ஸ்) அல்லது ஒரு பரமாணு = 0.00002 வினாடிகள் (செகண்ட்ஸ்). இந்த அளவுக்குத் துல்லியமாக ரிஷிகள் கணித்துக் கூறியுள்ளார்கள். பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்ததால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்த ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரிஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி வர்ஷ ருதுவென்றும், ஐப்பசி கார்த்திகை சரத ருதுவென்றும், மார்கழி, தை க்ஷேமந்த ருதுவென்றும், மாசி, பங்குனி சிசிர ருதுவென்றும் சொல்லப்படுகிறது.

ஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஒர் ஆண்டு அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றது. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷ்த்திரங்கள் ஆகியவற்றை குறித்து மாறுபடுகின்றன................ ."

......

மே மாத சென்னை வெயில். இரவிலும் வெப்பம் குறைந்தபாடில்லை. துக்ளக்கை பார்த்து படித்து தமிழில் type செய்ததில் வியர்த்து ஓழுகுகிறது. ஜன்னலை திறந்து விட்டேன். காற்று உடம்பில் பட சுகமான சுகம். Vicks மிட்டாயை வாயில் பொட்டு வாயை திறந்து காற்றை இழுக்க தொண்டையில் ஏற்படும் ஜில்லிப்பு போன்ற ஒரு சிலிர்ப்பு. ஜனனல் வழி தெரியும் வானத்தில் நட்சத்திரங்கள் மினுமினுகின்றன. பல ஒளியாண்டை கடந்து வந்த ஒளி. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன் என்று பள்ளி காலத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பூமி என்ற கணக்கில் இருக்குமானல்...? உயிரிகள் இல்லாமலும், உயிரின, தாவரங்களுடனும், அம்மண மனிதர்கள் முதல் advance மனிதர்கள் வரை எல்லா யுகமும் வியாப்பித்து, காலத்தால் சூழப்பட்டு இந்த பிரபஞ்சம் வேவ்வெறு யுகமான பூமிகாளால் நிறைந்து கிடக்கிறது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லாம் புரிந்து பேசாமல் இருக்க ஞானியாகாவோ அல்லது எதுவும் புரியாமல் அதிகம் பேசும் பகுத்தறிவாளனாகவோ நான் இல்லை. எதுவும் தெரியாத ரெண்டும் கெட்டான். ஒன்று மட்டும் தெரிகிறது திருவள்ளுவர் தயவால்...

" பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் "




Saturday, March 7, 2009

மதம் சம்பந்தமாய் சமீபத்தில் படித்த, பார்த்த, அனுபவித்த சில விஷயங்களை எழுத முற்படுகிறேன். உணர்வு பூர்வமான விஷயமாதலால் சிறிது தயக்கம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அவ்வாறு ஆனால் மன்னிக்க. அலுவலக வேலை அதிகமானதால் எழுத நினைத்தவை பல விடுப்பட்டுப்போயின.

அந்த நாள் காலை அலுவலகம் செல்லும் கூட்டத்தில் நானும் ஒருவன். ஒரு வழியாய் நியுயார்க் சப்-வே வந்தடைந்தபின் உக்கார ஒரு இடம் கிடைத்தது. நம்மூர் தாம்பரம் - எக்மோர் பயணத்திற்க்கும் இதற்க்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நம்மூரில் இருக்கும் புழுக்கமும், வியர்வையையம், ஒருவரை ஒருவர் இடித்தலும் இங்கு இல்லை. அதனால் பல நேரங்களில் பயணம் இனிதாகிறது மிகுந்த கூட்டதிலும். நம்மூர் பிரயாணம் பூமிக்கு மேல். இங்கு கீழ். மேலே இன்னொரு உலகம் நிற்க நேரமில்லாமல், ஓடிக்கொண்டிருக்கும்.

இரண்டு ஸ்டேஷன் வண்டி ஓடியபின் காலியான பக்கத்து இருக்கையில் ஒருவர் வந்து உக்கார்ந்தார். அவரை அடிக்கடி நான் வேலை செய்யும் இடத்தின் அருகில் பார்த்திருக்கிரேன், ஆகையால் ஒரு புன்முருவலை பரிமாறிக்கொண்டோம். அவர் ஒரு ஜுயிஸ் மதத்தை சார்ந்தவர் என்பதை அவர் தோற்றம் உணர்த்தியது. கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்து வந்தார். வலமிருந்து இடமாய் பக்கங்களை திருப்பி படிப்பது கவனத்தை கவர பக்கங்களை பார்த்தேன். ஹீப்ரு எழுத்துக்களும் ஏறத்தாழ சமஸ்கிருத சாயலில் இருத்தது. தமிழ்,சமஸ்கிருதம் போல் உலகின் பழமையான ஒரு மொழி. மிதமுள்ள பக்கங்களை படித்தபின் புத்தகத்தை முத்தமிட்டு பையில் வைத்தார். இறங்கும் இடம் இருவருக்கும் வரவில்லையாதலால் அமைதியாய் அமர்ந்திருந்தோம். நான் பார்த்தவரையில் இந்தியரை தவிர யாரும் பரிச்சயம் இல்லாதவருடன் பேச முற்படுவதில்லை. ஆனால் அதிசயமாய் அவர் என்னுடன் பேச முற்பட்டார். இந்தியரா? என்றார். ஆம் என்றேன். மும்பை சம்பவத்தை பற்றி தனது வருத்ததை தெரிவித்தார். அந்த வாரத்தில் தான் மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஜீயிஸ் ஒருவரின் உடல் புருக்ளின்-நியூயார்க் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவர் என்னுடன் பேசியதற்கு அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர், என்ன தோன்றியதோ, என் நெற்றியை சுட்டிக்காட்டி, அது என்ன என்றார். சிறிது நேரம் புரியாமல் விழித்து, என் நெற்றியில் இருக்கும் விபூதியை தான் கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். முன்பெல்லாம், அமெரிக்கர்களின் வேகம், வழ வழ கொழ கொழ ஆங்கிலத்தில் குறைந்த பட்சம் 20% புரியாமல் விடுபட்டுப்போகும். குறிப்பாய் ஆப்பரிக்க அமெரிக்கர்களின் மொழி, நம்மூர் சென்னை தமிழ் போல புரிதல் கடினம். தற்சமயம் புரியாத விகிதாசாரம் மிகவும் குறைந்திருக்கிறது அவர்களின் மொழியிலும். ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் என் நெற்றியை பார்த்த பொழுது நெற்றியில் விபூதி மிக லேசாகத்தான் இருந்தது. காலை 6 மணி அளவில் நெற்றியில் வைத்தது 8.30 மணி வரையில் இருந்தது அன்று அவர் கேட்பதற்காகதான் என்பது போல.

என்ன சொல்ல? "நீறு இல்லா நெற்றி பாழ்", "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு" என்று பழமொழியும், தேவாரமும் பாடி அவருக்கு புரிய வைக்க முடியுமா என்ன? Holy Ash என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி வைத்தேன். அவரே மதம் சம்பந்தமாய் கேள்வி எழுப்பியபின் நாமும் கேள்வி கேக்காவிட்டால் எப்படி?  எப்படி இந்த முடியில்லா தலையிலும் அந்த அவர்களின் கையடக்க குல்லாவை தலையில் அணிகிறார்கள் ? எவ்வாறு அது கிழே விழாமல் இருக்கிறது என்ற எனது நெடுனாள் ஆச்சரியத்தை அவரிடம் வெளிபடுத்தினேன். குல்லா அணியும் தாத்பரியம் என்ன என்பதை சாமர்த்தியமாய் கேட்டுவிட்டேனாக்கும்! காதின் ஒரத்தில் அவர்கள் வளர்க்கும் சுருள் சுருளான முடி, கருப்பு கால் சட்டை, வெள்ளை சட்டை, நீண்ட அங்கி, கோட், செரலாஹொம்ஸ் கதாபாத்திரத்தை நினைவுட்டும், நீண்ட தொப்பி என்று பல விஷயங்கள் இருப்பினும், அந்த சிறிய குல்லா பார்த்தமாத்திரத்தில் எல்லோரையும் நிச்சயம் கவரும்.

புதிய கான்செப்டை கேட்கப்போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்த எனக்கு எனக்கு ஏமாற்றமே!. ஏதோ சொன்னார். என்னால் சரியாய் உள்வாங்க முடியவில்லை. பொதுவாய் அவருக்கு முழுக்காரணம் தெரியவில்லை அல்லது விளக்க தெரியவில்லை என்று சமாதனப்படுத்திக்கொள்ளலாம். எதுவாகிலும் அந்த குல்லா அணியும் காரணம் மட்டும் என்னை வந்து அடையவில்லை. High street Brooklyn Bridge ஸ்டேசஷன் வர 'பை' சொல்லி இறங்கிச்சென்று விட்டார்.

சென்றபின் உரையாடலை யோசித்துப்பார்த்ததில் புரிந்தது, எனக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பது. மதம் வேறாகிலும், செய்யும் காரண காரியம் தெரியவில்லை. நம்மில் பலரும் இவ்வாறுதான். "வாழ்வு முடிந்தபின் ஒரு பிடி சாம்பல் தான்", அக்னியே எல்லாவற்றிலும் பரிசுத்தமானது" என்று பல்வேறு தத்துவங்கள் தோன்றினாலும், சரியான காரணத்தை அன்று அவருக்கு சொல்ல முடியவில்லை என்பது எனக்கு வருத்தம் தான். காரணங்கள் இல்லை என்பது இல்லை. காரணங்களை தேடும் மனதும், ஆர்வமும் என்னுள் இல்லை என்பதுதான் நிதர்சனம். என் அனுபவம் பல நாட்களை கடந்தும் நான் அதே நிலையில் இருக்கிறேன் என்பதே உதாரணம். புறக்காரணங்களை விட்டு கடவுள் தேடல் நம்மில் பலருக்கும் இருக்கிறது. கடவுள் உண்டு என்ற நம்பிக்கை அந்த தேடலை நிச்சயம் அதிகப்படுத்தும்.

இதை எழுதும் வேளையில் இந்த விடியோவை பார்க்க நேர்ந்தது. சரியா தப்பா என்று சரியாய் சொல்ல இயலவில்லை. ஏனெனில், In God we trust  என்று கரன்சியில் அடித்திருக்கும் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கடவுள் நம்பிக்கை இழந்தோரின் கூட்டம் அதிகமாகி கொண்டேதான் இருக்கிறது. சர்ச் இடித்தலும், விற்றலும் சகஜமாகி விட்டன. இந்த மார்கெட்ங்க்-கு இதுவும் காரணமாய் இருக்கலாம். உணவு கொடுத்தவனே கடவுள், அவன் சொன்னதே வேதம் என்பது வேண்டுமானால் பொருந்தலாம். எவ்வளவு நாள் பொருந்தும் என்பது தெரியவில்லை.


கூட்டத்தை கூட்டியவர்களுக்கும், கூட்டத்தில் சேர்ந்தவர்களுக்கும் கொள்கை பேசுவதற்கும், சலுகைகளுக்கும், சண்டைகளுக்கும் நேரம் இருக்குமே தவிர சாஸ்வதத்தை தேட நேரம் இருக்குமா? இருந்தால் மிக்க சந்தோஷம். மதத்தை பற்றிய பிரக்ஞை எனக்கு எப்பொழுதும் இல்லை. சுற்றம் பார்த்து குற்றம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. எனது பள்ளிப்படிப்பு முழுவதும் கிருஸ்துவ பாடசாலைகளில் தான். கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் கிருஸ்துவர்களே. அன்னாட்களில் புதிய ஏற்பாட்டை நான் படிக்காத நாளில்லை. மதம் கடந்தவர் மகாத்மா என்பதே எனது மதம்.

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள், உணருங்கள் ஒன்று பரம் பொருள் நாமதன் மக்கள் என்பதை.

கருத்துக்களை சொம்பேரித்தனப்படாமல், தவறாமல் பதியுங்கள்.

Saturday, January 24, 2009


When I chaffered with my friend, the topic went to Sathyam scandal. Obviously now, that is the hot topic and we can easily forget this after few days (or) once we get the next hot topic (Ramalinga raju will come out from jail and enjoy his rest of life with huge looted amount!!!)

My friend distressed and need loans to improve his business. Most of the time he surprised and expressed his unhappiness with the word “Ellam Kali kalam” and “Kali muthivittathu”

Do you know really what it means?

Hinduism explains the time calculation in relative terms to the life time of ‘Lord Brahma’ – the birth God!

His ‘Life time’ is defined as – 100 ‘Brahma’ years with 360 days per year – equivalent to 432 crore ‘earth’ years; His ‘night’ also constitutes of such 432 crore ‘earth’ years;

The end of a ‘DAY’ of brahma, is the universe’s end (the d-day!). Then ‘Lord Brahma’ sleeps for his ‘night’ time (another 432 crore years!). When his next DAY starts, the universe again starts a new cycle of life and evolves for the next 432 crore years!

Every ‘day’ of Brahma is split into 14 parts – each called as a ‘Manvanthra’. There is a head for every ‘Manvanthra’ called ‘The Manu’. The current time frame comes under the ‘Seventh Manu’ named ‘Vaivasvatha’.

Every Manvanthra constitutes of 71 Maha Yugas; 4 yugas constitute one Maha-yuga. The following are the yuga calculations;

Krutha yuga - 17,28,000 Years
Thretha Yuga - 12,96,000 Years
Dwapara Yuga - 8,64,000 Years
Kali Yuga - 4,32,000 Years

A above total of 43,20,000 years constitute a ‘Maha-yuga’.

Each Manvanthra has 71 Maha Yugas; and there are 14 Manvanthras; So 14 X 71 = 994 Maha-Yugas; 6 Maha-yugas are given for the transition period of every Manvanthra to the next; so: 994 Maha-Yugas + 6 Maha-yuga makes to 1000 Maha-Yugas. This is called a ‘Kalpa’ and constitutes Bhrahma’s One DAY. Currently we are in ‘Swetha varaha kalpa’.

To understand better, if we start from the lowest denomination:

1 Maha-Yuga = 43,20,000 Years;
One Manu’s period (Manvanthra) consists 71 Maha-Yugas: 71 X 43,20,000 = 30,67,20,000 Years
There are 14 Manvanthras: 14 X 30,67,20,000 = 429,40,80,000 Years;
6 Maha-Yugas for Manvanthra’s transition:6 X 43,20,000 = 2,59,20,000 Years;
Add the above for 14 Manu’s period: 429,40,80,000 + 2,59,20,000 = 432,00,00,000 (432 crore) Years; which equivalent to BRAHMA’S ONE DAY!

Apart from these calculations, our need is really we are in the end of Kali yuga? When the “Kali yuga” started?

As per these calculations, "Kali Yuga" began at midnight (00:00) on18 February
3102 BCE. We are now the year of 2009. Approximately “Kali yuga” began 1093 years BC. The cycle of “Kali yuga” is 4,32,000 years. so, we just entered to “Kali yuga” ( 4,32,000 – 3102 = 428898 years remaining )

So, don’t worry. Enjoy the little things, for one day you may look back and realize they were the big things.

Thank you my dear friend, you keeps lot of concealed information each your words! Just am digging this.