Tuesday, October 26, 2010


ஏழு எட்டு மாதங்கள் உருண்டோடிவிட்டது. நீண்ட நெடிய அயர்வான கால கட்டங்கள். புலம் பெயர்ந்து, உயிர் இழந்த வலி உணர்ந்த நாட்கள். உள்ளுர், வெளியூர், வெளி-நாடு என்று நிறைய பயணங்கள். அயர்ச்சியும், அழுகைகளும் போக சொச்சமாய் மகிழ்ச்சி மிச்சம். ஜயகாந்தனின் திரையுலக அனுபவங்கள், சிலமுறை படித்த சுஜாதாவின் கணைழாளியின் கடைசிப்பக்கங்கள், தேவனின் சிறுகதைத்தொகுப்பு என்று சில புத்தகங்கள் மட்டுமே படித்ததாய் ஞாபகம். தயாளு அம்மாளின் தங்கை பேத்தி கடைத்திறப்பு விழா போன்ற நேரத்தை விழுங்கும் வெட்டிச்செய்திகளுக்கு இடையே எனது வேலை சம்பந்தமாய் சில அறிந்தது ஆறுதல். சென்ற இடங்களும், சந்தித்த மனிதர்களும் என்றுமே புதியன. அவை பற்றிய பதிவுகள், எண்ணங்கள் தொடர்ச்சியாய் தொடரும் இனி...