Tuesday, February 5, 2013

எழுதி நிறைய நாட்களாகிவிட்டது. பகிர, எழுத நினைத்த பல விஷயங்கள் மறதியால் முழ்கடிக்கப்பட்டுவிட்டன. தமிழனுக்கு சினிமாதானே எல்லாம்..அதில் இருந்து ஆரமிக்கலாம் மீண்டும்...

விஸ்வரூபம்....அடாவடிதனத்தின் விஸ்வரூபம், அரசின் கண்மூடித்தனமான அடக்குமுறையின் விஸ்வரூபம்..தன் படத்திற்கு இவ்வளவு பெரிய விளம்பரம் கிடைக்கும் என்று கமல் தன் பகுத்தறிவால்(!!!) பகுத்து அறிந்து இருக்கமாட்டார். படம் intervalக்கு அப்புறம்தான் படா தமாஷா, ஷோக்கா கீது என்பது போல, கமல் தன் சொத்து எல்லாம் போயே போய் விட்டது என்ற என்ற அழுகைக்கு அப்புறம்தான் குட்டிக்கரணம், கோமாளித்தனம், அம்மாதான் எல்லாம் மற்றதெல்லாம் சும்மா என்று சுவாரசியமான சீன் போட்டு ஒருவழியாய் படத்தை வெளிவர தேதி சொல்லிவிட்டார்.

இனிமேல் எல்லா மூஸ்லிமும் நல்லவர்கள், இந்து, கிருஸ்துவர்களும் நல்லவர்கள்...எந்த நாட்டிலும் குண்டே வெடிக்ககல, யாருமே சாகல..என்று நல்ல படமா எடுங்கள். எடுத்து முடித்தபின், எதற்கும் பள்ளர், பறையர், செட்டி, அய்யர், வன்னியர், முகமதியர், கிருஸ்துவர், நாடார், நரிக்குறவர், கவுடர், கவுண்டர், படுகர், பிள்ளை, வேளாளர், வெட்டியான்...முடியலடா சாமி....எல்லாருக்கும் போட்டு காண்பித்து NOC வாங்கிட்டு அப்புறம் சென்சார்க்கு போங்க..இல்லாட்டி படத்தை government தடை பண்ணிடும் ஆமா...

இதை எழுதும் நேரத்தில் படித்தது...சிங்கம்2 படத்தை தடை பண்ணணும்..மூஸ்லிம்கள் கடல் கொள்ளயர்களாய் வராங்களாம்..கடல் பட director, producer ரை அரஸ்ட் பண்ணணுமாம்..கிருஸ்துவை பத்தி ஏதோ சொல்லி இருக்காங்களாம்....ஆதிபகவன் படத்தை எடுத்து முடித்தவுடன் இந்து மக்கள் கட்சி ஆட்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டுமாம்...

2 comments:

venkat said...

you have wonderful writing style, welcome back. Keep writing. Excellent.

venkat said...

some one along the same lines, sema interesting

http://vishwaroopamandtamilnadu.blogspot.com/p/28.html